கறவை மாடுகளுக்கு அடர்தீவனம், உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் ஆகிய மூன்று முறைகளாக தீவனம் அளிக்கப்படுகிறது. பால் கறவைக்கேற்ப கறவை மாட்டிற்க்கு 20 கிலோவிலிருந்து 30 கிலோ தீவனம் அளிக்கப்படவேண்டும். அதில் 20 கிலோ பசுந்தீவனம், மற்றும் 4-5 கிலோ உலர் தீவனம் அளிக்கப்படவேண்டும். அடர் தீவனமானது மூன்று லிட்டர் பால் கறக்கும் ஒரு மாட்டிற்கு, ஒரு கிலோ வீதம் அளிக்க வேண்டும். மேலே கூறிய தீவனங்களை காலை மற்றும் மாலை என்று இரு முறை பிரித்து வழங்கப்படவேண்டும். மேலும், கால்நடை வளர்ப்பில், மாடுகளுக்கு தினமும் 10 முதல் 15 கிராம் வரை இட்லிக்குப் போடப்படும் சோடா உப்பும், 15 முதல் 30 கிராம் வரை சமையலுக்கு உபயோகிக்கும் உப்பும் தீவனத்துடன் சேர்த்து அளித்து வந்தால், பாலில் எஸ்.என்.எப். என்ற கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.
| Comment | Author | Date |
|---|---|---|
| Be the first to post a comment... | ||
Copyright © 2026 Reliance Foundation. All Rights Reserved. Terms & Conditions. Privacy Policy.