மானாவாரியாக மக்காச்சோளம் புரட்டாசி மாதத்தில் சாகுபடி செய்ய ஏற்றது. கடைசி உழவுக்கு முன் அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ யூரியா,60 கிலோ டிஏபி, 20 கிலோ பொட்டாஷ் உரங்களை இட்டு தொழு உரத்துடன் 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 4 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை கலந்து இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும். அமெரிக்கப்படைப்புழுவின் ஆரம்ப கட்ட தாக்குதலில் இருந்து விடுபட நடப்பு பருவத்தில் மக்காச்சோளம் விதைப்பிற்கு முன்னர் குளோரோடிரானிபுரோல் அல்லது தையோமீத்தாக்சம் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதால் 15 முதல் 20 நாட்கள் வரை படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மேலும் அடியுரமாக கடைசி உழவின் போது தரமான வேப்பம் பிண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ இடுவதால், அந்துப்பூச்சிகள் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தலாம். மேலும் மக்காச்சோளம் விதைப்பு செய்த ஒரு வாரத்திற்குள் இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 5 எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.