நெல் சாகுபடியில் கூண்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்துதல் பற்றிய தகவல்

நெல் சாகுபடியில் கூண்டுப் புழு இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்ணுவதால் இலைகள் வெள்ளைநிறக் காகிதம் போல் தோன்றும். கத்திரிக்கோல் கொண்டு சரியான கோணத்தில் வெட்டப்பட்டது போல் இலைகள் வெட்டப்பட்டிருக்கும். இப்படி வெட்டப்பட்ட இலைகள் நீரில் மிதக்கும். இதனை கட்டுப்படுத்த 6 லிட்டர் மண்ணெண்ணெய்யில் 3 கிலோ மணலைக் கலந்து வயலில் இட வேண்டும். பிறகு வயலின் எதிரெதிர் வரப்புகளில் இருந்து பயிர்களின் மேல் படும்படி கயிற்றை இழுத்தால் கூண்டுப்புழு மற்றும் முட்டைகளும் நீரில் விழுந்து விடும். பிறகு, நீரை வடித்துவிடலாம்.

Content Files
Content Comments
Likes Dislikes
Comment Author Date
Be the first to post a comment...
Content Tags