பச்சை பாசி-லிருந்து நெற்பயிரை பாதுகாக்க டிஏபி உரம் இடுதலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். யூரியா மற்றும் பொட்டாஸ் உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறைபாடுகள் காணப்படும் வயல்களில் உள்ள ஆழ்குழாய் மோட்டார் தண்ணீர் மாதிரிகள் சேகரித்து மண் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து பகுப்பாய்வு செய்து பகுப்பாய்வு முடிவுகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் சாகுபடி முறைகளை மேற்கொள்ள வேண்டும். பசுந்தாள் உர பயிர்களாக சணப்பு, தக்கைப்பூண்டு மற்றும் கொளுஞ்சி/காவாலை ஆகிய ஏதேனும் ஒரு பசுந்தாளுரப் பயிரினை சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழுதல் வேண்டும். மேலும், வேளாண்மைத் துறையினால் பரிந்துரைக்கப்படும் திரவ நுண்ணுயிர் உரங்களான பொட்டாக்ஷ் பாக்டீரியா, பாஸ்போ பாக்டீரியா, துத்தநாக சத்தைக் கரைத்துக் கொடுக்கும் பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும். மேலும் பச்சைப்பாசியை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 2 கிலோ நன்கு தூளாக்கப்பட்ட காப்பர் சல்பேட்டுடன் 25 கிலோ மணல் சேர்த்து வயலில் சீராக தூவ வேண்டும். வயலை காயவிடாமல் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
Comment | Author | Date |
---|---|---|
Be the first to post a comment... |
Copyright © 2025 Reliance Foundation. All Rights Reserved.